Aug 18, 2012

தமிழர்கள் விசயத்தில் மீண்டும் குழப்பம் செய்யும் தினமலர்!

Aug 19: 1995ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விடுதலைப்புலிகள், 43 பேர், அகழி வெட்டி சிறையில் இருந்து தப்பினர். தப்பியோடிய புலிகளில், 21 பேர் மட்டுமே பிடிபட்டனர்.

இந்நிலையில், புதுக்கோட்டையில் நேற்று , வைகோ பேசுகையில், ""வேலூர் சிறையிலிருந்து, அகழி வழியாக தப்பிய இலங்கைத் தமிழ் இளைஞர்கள், 45 பேரில், மூவரை புதுக்கோட்டையிலிருந்து, கடல் வழியாக இலங்கைக்கு நான் தான் அனுப்பி வைத்தேன்,'' எனக் கூறினார்.

இங்கேதான் நிற்கிறது தினமலர்:
சிறையில் இருந்து தப்பிய கைதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதே குற்றம் எனும் நிலையில், அவர்களை வேறு நாட்டுக்கு தப்பிச் செல்ல உதவியதும், அதை வெளிப்படையாக, வைகோ பெருமிதமாகத் தெரிவித்திருப்பதும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Aug 17, 2012

அமெரிக்க குடியுரிமை சட்டத்தில் மாற்றம்! இந்தியர்களே உஷார்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிய குடியுரிமை சட்டப்படி நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதைத் தடுக்க ஏராளமான இந்தியர்கள் உள்ளிட்டோர் நேற்று விசாவை புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளித்தனர்.

பல்வேறு காரணங்களால், மாணவர் விசா, சுற்றுலா விசா போன்றவற்றை பயன்படுத்தி, அமெரிக்கா சென்றவர்கள் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகின்றனர். விசா, காலாவதியான பிறகும் பலர் அங்கேயே தங்கியுள்ளனர்.

இது போன்று முறைக்கேடாகத் தங்கியுள்ளவர்களை அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்ப அதிபர் ஒபாமாவின் புதிய குடியுரிமை கொள்கை வழி வகுத்துள்ளது.அமெரிக்காவில் 17.6 லட்சம் பேர் முறைக்கேடாக தங்கியுள்ளனர். இவர்களில் 30 ஆயிரம் பேர் இந்தியர்கள். இவர்கள் அனைவரும் 31 வயதுக்குட்பட்டவர்கள்.

Aug 16, 2012

சுதந்திரத்தை கொண்டாடவிடு அல்லது எதிர்க்க விடு! 2க்கும் தடை!

சுதந்திர தினத்துக்கு கருப்புக்கொடி: கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து இடிந்தகரை பகுதியில் சுதந்திரதினமான நேற்று கருப்பு கொடி ஏற்றப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன.

மீனவர்கள் வேலைக்கு செல்லவில்லை. போராட்டக்காரர்கள் நேற்று மாலை இடிந்தகரை ஆலயத்தில் இருந்து கருப்புகொடியுடன் சவப்பெட்டி ஊர்வலம் நடத்தினர்.

Aug 13, 2012

`டெசோ' மாநாடு வெற்றியும் தோல்வியும்!

சென்னை: நேற்று மாலையில்  சென்னையில் ‘டெசோ’ மாநாடு   நடைபெற்று முடிந்தது. இதில் லோக் ஜனசக்தி தலைவரும் எம்.பி.யுமான ராம்விலாஸ் பஸ்வான் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்தியாவின் வட மாநிலங்களில் இருந்தும், அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, சுவீடன், மொராக்கோ, சிங்கப்பூர், மலேசியா, நைஜீரியா மற்றும் இலங்கை நாடுகளில் இருந்தும் 30க்கும் மேற்பட்ட தமிழார்வலர்கள் வந்திருந்தனர்.

டெசோ' மாநாட்டில் தொல். திருமாவளவன்: ’’தனி ஈழத்தை வென்றெடுப்பதற்கு முன்பாக 3 சவால்களை நாம் எதிர்கொள்ளவேண்டி உள்ளது. ஈழத்தில் தமிழர்கள் வசித்து வந்த பகுதிகளில் சிங்களர்களையும், ராணுவ முகாம்களையும் குடிபெயர வைத்து ஆக்கிரமிப்பு செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

Aug 12, 2012

அஸ்ஸாம் மக்களுக்கு நிவாரணம்! ரிஹாப் சாதனை!

அஸ்ஸாமில் போடோக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே நிகழ்ந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் 149 அகதிகள் முகாம்களிலும் ரிஹாப் தன்னார்வ சேவைத் தொண்டர்களின் துயர் துடைப்பு பணிகள் தொடர்கின்றன.

ரிஹாப் இந்தியா பவுண்டேசன் பொதுச் செயலாளரும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினருமான ஒ.எம்.அப்துல் ஸலாம் முகாம்களில் நடைபெறும் துயர் துடைப்பு பணிகளுக்கு தலைமை தாங்கி வழி நடத்தி வருகிறார்.