Aug 11, 2012

சிந்திக்கவும் இணையதளம் வன்மையாக கண்டிக்கிறது!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருளை நிரப்ப அணுசக்தி ஆணையம் அனுமதி அளித்துள்ளது. எனவே இன்னும் 10 நாட்களில் யுரேனியம் எரிபொருளை நிரப்பி மின் உற்பத்தியை தொடங்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சிந்திக்கவும்: கூடன் குளத்தில் அணு மின் உற்பத்தியை தொடங்குவதை சிந்திக்கவும் இணையத்தளம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தை தர நெய்வேலி அனல் மின்நிலையம் மற்றும் நீர், காற்றலை மின் நிலையங்கள் இருக்க கூடங்குளம் அணு மின்நிலையம் ஏன்?

கேரளா மக்களால், அரசியல் கட்சிகளால் புறம் தள்ளப்பட்ட இந்த அணு உலை தமிழர்களை கொல்லும் கொலை கருவியாக கூடங்குளத்தில் நிறுவப்பட்டது. கூடங்குளம் மக்களின் நியமான கோரிக்கைகளை ஏற்க மறுத்த மத்திய பயங்கரவாத அரசு மக்களின் போராட்டத்தை பயங்கரவாதம் என்று சித்தரிக்கிறது.

Aug 10, 2012

வேஷம் கலந்தது! ஓய்வு எடுக்கும் நேரமும் வந்தது!

’ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று சித்தரித்து, அதனை ஒழிக்கும் போர் என்று கூறி, நமது சொந்தங்கள் ஒன்றே முக்கால் லட்சம் பேரை சிங்கள பேரினவாத அரசு கொன்று குவித்தது.

விடுதலைப்புலிகளை அழித்துவிட்டோம், போர் முடிந்துவிட்டது என்று 2009ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி அறிவித்தது இலங்கை பயங்கரவாத அரசு. போர் முடிந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவர்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்கின்றனர்.

தமிழர் வாழ்ந்த பூமியில் 30 விழுக்காட்டிற்கு மேல் சிங்கள ராணுவத்தின் ராணுவ முகாம்கள் ஆகிப்போனது. தென்னிலங்கையில் இருந்து பல்லாயிரக்கணக்கில் சிங்களர்கள் தமிழர் பகுதிகளில் குடியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழர்களின் விளை நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இப்படி தமிழீழமே சிங்கள காலனியாக மாற்றப்பட்டு வருகிறது.

Aug 9, 2012

யார் வந்தேறி! அத்வானியா? மண்ணின் மைந்தர்களா?

புதுடெல்லி: அஸ்ஸாமில் நடைபெற்ற இனக்கலவரம் தொடர்பாக விசாரணைச் செய்யும் பொறுப்பு  சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் வன்முறைக்கு வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களே காரணம் என்று கேவலமான கருத்தை முன்வைத்து பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி ஒத்தி வைப்பு தீர்மானத்தின் மீது பேசினார். அவரது  ஒத்திவைப்புத் தீர்மானம் குரல் வாக்கு மூலம் தோற்கடிக்கப்பட்டது.

அசாம் கே.எல்.ஒ தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 முஸ்லிம்கள் கொலைச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரச்சனைகள் உருவானதாக மத்திய உள்துறை அமைச்சர் விளக்கமளித்தார். மீண்டும் பிரச்சனை உருவானால் தலையிட  ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.  

Aug 8, 2012

கருணாநிதி ஒரு கபடதாரி!

சென்னை: "டெசோ மாநாடு பற்றி இலங்கை அரசினால்  செய்யப்பட்டுள்ள தவறான பிரசாரத்தை இங்குள்ள தமிழர்களோ, இலங்கைத் தமிழர்களோ, உலகத் தமிழர்களோ நம்ப வேண்டாம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கை அரசின் சார்பில், கடந்த, 6ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், டெசோ மாநாடு இலங்கைக்கு எதிரான விஷயம் என்றும்,
 இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கையர் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும், இந்த மாநாட்டை இலங்கை அரசு வன்மையாகக் கண்டிக்கிறது எனத் தெரிவித்துள்ளது.

Aug 7, 2012

பாபா ராம்தேவ் 4 கோடி ரூபாய் வரி மோசடி!

புதுடில்லி: கறுப்பு பண பதுக்கலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பாபா ராம்தேவ், நான்கு கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் யோகா குரு பாபா ராம்தேவ், இந்தியர்களால் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி, தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

Aug 6, 2012

தானும் குழம்பி மக்களையும் குழப்பிய அன்னா ஹசாரே!

அன்னா ஹசாரே: லோக்பால் மசோதா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அன்னா தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்தார்.

இந்நிலையில் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அன்னா ஹசாரே குழு  இன்று திடீரென கலைக்கப்பட்டது.

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை தயாரித்த மத்திய அரசு, அதனை மக்களவையில் நிறைவேற்றியது. மாநிலங்களவையில் இம்மசோதா நிறைவேறவில்லை.

Aug 5, 2012

இந்தியாவின் கருப்பு பணங்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு!

புதுடில்லி: "இந்தியாவில் சட்ட விரோதமான வழிகளில் சம்பாதிக்கப்படும் கறுப்பு பணம், ரியல் எஸ்டேட், தேர்தல் பிரசாரம் உட்பட பல வழிகளில் செலவிடப்படுகிறது' என, அமெரிக்க வெளியுறவுத் துறையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சட்ட விரோதமான வழிகளிலும், ஊழல் மூலமும் சம்பாதிக்கப்படும் கறுப்பு பணம், ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வதற்கும், கல்வித் திட்டங்களும், அறக்கட்டளைகளை துவக்கவும், தேர்தல் பிரசாரத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.