Jun 30, 2012

ஊழல் அற்ற முதல் மாநில முதல்வர்! கேஜ்ரிவால்!!

அகமதாபாத், ஜூன் 30:  குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தான் ஊழலற்றவர் என்று காட்ட விரும்பினால், முதலில் லோக் ஆயுக்தவை அமைக்க வழிசெய்ய வேண்டும் என்றார் அண்ணா ஹசாரெ குழுவின் அரவிந்த் கெஜ்ரிவால்.

மோடி ஊழல்வாதி என்கிறீர்களா என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "மோடியை நான் ஊழல்வாதி என்று சொல்லவில்லை.  ஆனால், ஊழல்களில் தொடர்புடைய தன்னுடைய அமைச்சரவை சகாக்களை அவர் பாதுகாக்கிறார். அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு ஆகாமல் பார்த்துக் கொள்கிறார். அதற்கு, லோக் ஆயுக்த அமைப்பை அமைக்காமல் இழுத்தடிக்கிறார். 


கடந்த 9 ஆண்டுகளாக இது குறித்து முறையிட்டும் லோக் ஆயுக்த அமைப்பை அவர் ஏன் அமைக்கவில்லை? ஊழல் இல்லாத மாநிலமாக குஜராத்தை மாற்ற வேண்டும் என்று மோடி விரும்பினால், முதலில் அவர் லோக் ஆயுக்தவை அமைக்க வேண்டும்” என்றார் கேஜ்ரிவால். செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.

Jun 28, 2012

வேலை வேலை என்று மூழ்கிப்போகிறவரா நீங்கள்!

எந்நேரமும் வேலை வேலை என்று அதிலேயே மூழ்கிப் போகிறவரா நீங்கள்? ஜாக்கிரதை, வேலை சார்ந்த வியாதிகள் தற்போது அதிகரித்து வருகின்றன என்கிறது ஓர் ஆய்வு. சுமார் 2 கோடி இந்தியர்கள் வேலையால் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி இருக்கிறார்களாம்.

பணியிட பாதிப்பு என்றால், சுரங்கங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், ஆழ்கடலில் மூழ்கி ஆய்வு செய்வோருக்கு ஏற்படும் காயங்கள், கோழிப்பண்ணைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் `பேரட் பீவர்' என்றில்லை. `ஒயிட்காலர் ஜாப்' எனப்படும் அலுவலகப் பணிபுரிபவர்களுக்கும் அனேக பாதிப்புகள் ஏற்படலாம்.

Jun 26, 2012

மஹராஷ்ட்ரா சிறைச்சாலையின் அதிர்ச்சி தகவல்!! TISS!!


புதுடெல்லி:மஹராஷ்ட்ரா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகளின் சமூக சூழல்களை குறித்து ஆய்வு செய்த டாட்டா இன்ஸ்ட்யூட் ஆஃப் சோசியல் சயன்ஸஸ்(Tata Institute of Social Sciences (TISS)) வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சிகரமான உண்மைகள் அடங்கியுள்ளன.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள 90 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் நிரபராதிகள் என்றும், க்ரிமினல் கும்பல்களுடன் அவர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் TISS அறிக்கை கூறுகிறது. சில வழக்குகளில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே போலீஸ் கைது செய்கிறது என்று TISS அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

Jun 24, 2012

கூகுளின் புது முயற்சி! மொழி கலாச்சாரம் பண்பாட்டுக்கு!!


உலகம் முழுவதும் அழியும் நிலையில் இருக்கும் 3 ஆயிரம் மொழிகளை காப்பாற்றும் நோக்கில் பிரத்யேக வெப்சைட்டை கூகுள் உருவாக்கியுள்ளது.

உலகப்புகழ் பெற்ற கூகுள் இணையதளம் அழிந்து வரும் உலக மொழிகளை பாதுகாக்கும் நோக்கில் புதிய இணையதளத்தை உருவாக்கி உள்ளது. அறிஞர்கள் மற்றும் மொழியியல் வல்லுனர்கள் அடங்கிய குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த குழு அழிந்துவரும் மொழிகளை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். இணையதளத்தில் பொதுமக்கள் பங்கு கொண்டு தங்கள் கருத்துக்கள், தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.