Jun 15, 2012

கலகலத்துக்கொண்டு இருக்கும் காவி கூடாரம்!!


டெல்லி: ஜூன், 16. இந்திய வலதுசாரி அரசியலின் மூக்கணாங் கயிற்றை பிடித்துக் கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சி 2014-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலை குறிவைத்து திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கும் வேளையில், மும்பையில் கடந்த சில வாரத்திற்கு முன்பு முடிவுற்ற அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் காவிப் படையின் பலத்தை விட பலகீனத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்தியது.
கட்டுப்பாடும், ஒழுக்கமும், கட்சி கட்டமைப்பும் காணாமல் போன காங்கிரஸுக்கு பதிலாள் நாங்கள்தாம் என ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் முகமூடியான பா.ஜ.க மார்தட்டியது. ஆனால், அண்மைக் காலமாக காங்கிரஸ் கட்சியையே முறியடிக்கும் வகையில் உட்கட்சி பூசலிலும், ஊழலிலும் பா.ஜ.க முன்னணி வகிப்பதை கண்டு வருகிறோம்.

Jun 14, 2012

பர்மாவை கண்டும் காணாத ஐ நா வை கண்டித்து!?

பர்மாவில் நடைபெற்று வரும் இன கலவரத்தில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டும் சொந்த மண்ணிலேயே அநாதையாக்கப்பட்டு உள்ளனர்.

இதனை ஐக்கிய நாடுகள் சபை கண்டும் காணாமல் கண்மூடி மௌனம் சாதிப்பதை கண்டித்து வரும் 19.06.2012 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்களின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பெசன்ட் நகர் பீச் அருகில் உள்ள ஐ,நா,அகதிகள் மறுவாழ்வு துறை அலுவலகம் முன்பு மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது .இந்த போராட்டத்தில் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க அணியணியாய் கலந்து கொள்ள கேட்டுகொல்கிறது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.