டெல்லி: ஜூன், 16. இந்திய வலதுசாரி அரசியலின் மூக்கணாங் கயிற்றை பிடித்துக் கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சி 2014-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலை குறிவைத்து திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கும் வேளையில், மும்பையில் கடந்த சில வாரத்திற்கு முன்பு முடிவுற்ற அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் காவிப் படையின் பலத்தை விட பலகீனத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்தியது.
கட்டுப்பாடும், ஒழுக்கமும், கட்சி கட்டமைப்பும் காணாமல் போன காங்கிரஸுக்கு பதிலாள் நாங்கள்தாம் என ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் முகமூடியான பா.ஜ.க மார்தட்டியது. ஆனால், அண்மைக் காலமாக காங்கிரஸ் கட்சியையே முறியடிக்கும் வகையில் உட்கட்சி பூசலிலும், ஊழலிலும் பா.ஜ.க முன்னணி வகிப்பதை கண்டு வருகிறோம்.
.jpg)







