May 18, 2012

புரட்சி தலைவியின் போறம்(பிற்)போக்குதனம்!!


சென்னை: ரோம் நகரம் பற்றி எரியும் பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையைப் போலத்தான் தமிழகத்தில் ஜெயா அரசின் நிலையும் அமைந்துள்ளது.

தனது அரசின் ஓர் ஆண்டு நிறைவையொட்டி ஒரே நாளில் 25 கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்து சாதனைப் படைத்துள்ளார் புரட்சி தலைவி.
ஒட்டுமொத்தமாக ஓர் ஆண்டு நிறைவு விளம்பரத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை 25 கோடி ஆகும். சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களின் தேசிய பத்திரிகைகளில் நேற்று முன்தினம் முதல் பக்க முழு நீள விளம்பரம் வெளியானது.

May 16, 2012

ஷ்ஷ்ஷ் அப்பாடா இப்பவே கண்ண கட்டுதே! பா ஜ க!?


புதுடெல்லி: அடுத்தடுத்து ஒவ்வொரு மாநில பிரிவுகளிலும் ஏற்படும் குழப்பங்களையும், பிரச்சனைகளையும் தீர்ப்பதில் பா.ஜ.க மேலிடத்திற்கு இப்பவே கண்ணைக்கட்ட ஆரம்பித்துவிட்டதாம்.
கர்நாடகாவில் எடியூரப்பாவும், ராஜஸ்தானில் வசுந்தராஜே சிந்தியாவும் தம் வசம் வைத்திருக்கும் எம்.எல்.ஏக்களை காட்டி பா.ஜ.க மேலிடத்தை மிரட்டி வரும் வேளையில், குஜராத்தில் முன்னாள் முதல்வரும் பா.ஜ.கவின் மூத்த தலைவருமான கேசுபாய் பட்டேல் மோடி எதிர்ப்பை கிளறிவிட்டு கட்சிக்கு அச்சுறுத்தலை விடுத்து வருகிறார்.

May 14, 2012

கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு தீர்ப்பாயம் இன்று!!


சென்னை: சென்னை லயோலா கல்லூரியில் கூடங்குளம் அணு உலை குறித்த பொது விசாரணை இன்று நடைபெறுகிறது.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரையில் மே முதல் தேதி தொடங்கி நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 14வது நாளாகத் தொடர்கிறது.

இந்த நிலையில், கூடங்குளம் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாடு பற்றி, லயோலா கல்லூரியில் மக்கள் தீர்ப்பாயம் ஒன்று விசாரணை நடத்துகிறது.