Apr 20, 2012

அரசு ஆள்கிறதா அல்லது நம்பிக்கை ஆள்கிறதா?

April 21: புதுடெல்லி: சேது சமுத்திர திட்டத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது குறித்து நீதிமன்றமே முடிவு செய்யலாம் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது.

மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை சரியா, தவறா என்பது போன்ற விவாதத்தில் மத்திய அரசு கருத்து கூறுவது சரியாக இருக்காது’ என்று குறிப்பிட்டுள்ளது.

அதனால், சேது சமுத்திரம் குறித்து புதிதாக கருத்து தெரிவிக்க ஒன்றும் இல்லை. மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக நீதிமன்றம் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம்” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Apr 18, 2012

கருணாநிதியின் காலம் கடந்த கவலை!

April 19: தனி ஈழம் கிடைக்க ஐக்கிய நாடுகள் சபை தமிழர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுவரை உங்களுடைய நிறைவேறாத ஆசை என்ன என்ற கேள்விக்கு 'தனி ஈழம்' என்று பதிலளித்தார். அந்தத் 'தனி ஈழம்' தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு கோரிக்கை அந்த வரவேற்கத்தக்கது என்று கூறினார்.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டின் பேரில் இதைப் போல பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஒருசில நாடுகள் தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன. அதன் அடிப்படையில் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தி, அந்த வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் 'தனி ஈழம்' கிடைப்பதற்கு ஐக்கிய நாடுகள் மன்றம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Apr 16, 2012

கேப்டனுக்கு ஒரு 'o' போடுவோம்!

April 17: விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில்  மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் எம்.எல்.ஏ.  விஜயகாந்த்.

தொடர் மின்வெட்டு  குடிநீர் கிடைக்காமல் அவதியுறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சென்னையில் இருந்து குடிநீர் சப்ளை செய்ய லாரியை அனுப்பி வைத்தார் விஜயகாந்த்.

இன்று முதல் குடிநீர் சப்ளை துவக்கப்பட்டது. தொகுதி முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு உள்ள இடங்களுக்கு, லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்ய தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்தார் விஜயகாந்த்.

Apr 15, 2012

செய்திகளும் விமர்சனங்களும்! வாசிப்பது மலர்விழி!

1) செய்தி: "இலங்கையிலிருந்து தப்பிச் சென்று வேறு 
பெயர்களில் வசிக்கும், விடுதலைப் புலிகளை பற்றிய 
தகவல்களை அளிப்பதில் வெளிநாடுகள் ஒத்துழைப்பு அளிக்க 
மறுக்கின்றன என இலங்கை பாதுகாப்பு செயலர் கோத்தபையா
தெரிவித்துள்ளார்.

பதில்: இலங்கை பயங்கரவாத அரசுக்கு பயந்து அவர்கள் 
பெயர்களை மாற்றி கொள்ளவில்லை. மீண்டும் விடுதலை 
போராட்டத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே அவர்கள் 
தங்கள் பெயர்களை மாற்றி தங்களது இருப்புகளை நிலை 
பெற செய்துள்ளார்கள்.