Mar 31, 2012

அரசு பயங்கரவாதம்! வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்!

April 01: காஷ்மீரில் அமுலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை உடனே ரத்து செய்யவேண்டும் என்று ஐக்கியநாடுகள் சபை கேட்டுக் கொண்டுள்ளது.

ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் கடுமையானது வெறுக்கத்தக்கது என்றும் இது போன்ற கடுமையான சட்டங்கள் சர்வதேச விதிமுறை களுக்கு முரணானது என்றும் இந்தியாவில் நீதிக்கு புறம்பான படுகொலைகள் நடந்து வருகின்றன என்றும் காஷ்மீரில் தொடர்ந்து மனித உரிமை மீறகள் நடக்கின்றன என்றும் ஐநாவின் மனித உரிமைகளுக்கான பிரதிநிதி ஹைனெஸ் கூறியுள்ளார்.

Mar 29, 2012

இந்தியாவை ஆட்சி செய்யும் ஹிந்துத்துவா!

March 30, டெல்லி:  சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று பர்லிமன்ட் கூட்டத்தொடரில் திமுக சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டது.

மத்தியை ஆளும் காங்கிரஸ் அரசும் பாரதிய ஜனதாவும் ஒன்றுதான் என்பது பல சந்தர்ப்பங்களில் நிருபிக்கப்பட்ட உண்மை. ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கம் இந்திய ராணுவம், உளவுத்துறை, காவல்துறை,   நீதி துறை மற்றும் அரசியல் கட்சிகளில் ஊடுருவி விட்டது என்பதை நிருபிக்கும் பல சம்பவங்கள் இந்தியாவில்  தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Mar 28, 2012

மன்மோகன் என்கிற சாத்தான் வேதம் ஓதுகிறது!

March 29: அணு சக்தி பயங்கரவாதம் எதிர்காலத்தில் உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என மன்மோகன் சிங் திருவாய் மலர்ந்துள்ளார்.  

அணு ஆயுதம் இல்லாத நிலையே உலகிற்கு பாதுக்காப்பானது என்றும் கூறியுள்ளார். தென்கொரியா தலைநகரில் நடக்கும் சர்வதேச அணு சக்தி மாநாட்டில் கலந்து கொண்டார் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்.

அதில் அவர் பேசியதாவது, அணு சக்தி பயங்கரவாதம் குறித்து இந்தியா விழிப்புணர்வோடு உள்ளது என்றும்  ரசாயனம், உயிரியல், மற்றும் கதிர்வீச்சு ஆயுதங்கள் பரவுவதை குறித்து தடுக்கும் ஐநாவின் தீர்மானத்தை நீடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Mar 26, 2012

நீதி மறுக்கும் நீதித்துறைகள்!

March 27, சென்னை: 1). போலீஸ் அராஜகம்: மெரினா கடற்கரையில் தமிழர் எழுச்சி இயக்கம் மற்றும் தமிழக பெண்கள் செயற்கழகம் ஆகியவை இணைந்து  அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அதில் பள்ளி மாணவர்கள், குழந்தைகள் அவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 

அவர்கள் அணு உலையின் பாதிப்பை விளக்கும் பதாதைகளை ஏந்தி போராட்டடம் செய்தனர். இதை பொறுக்காத காவல் துறை எட்டு மாத கை குழந்தை முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தது.  இதில் கலந்து கொண்ட குழந்தைகள் அணு உலையின் பயங்கரத்தை விளக்கி முழக்கம் இட்டது பொது மக்கள் அனைவரையும் கவர்ந்தது.