Mar 23, 2012

தமிழர்களை உறவாடி கெடுத்த இந்தியா?

March 24: ஐக்கிய நாடுகளின் சபையில் இலங்கையின் போர் குற்றம் குறித்து அமெரிக்கா கொண்டு வந்த  தீர்மானத்துக்கு ஆதரவு கோரி ஐ. நா.வின் மனித உரிமைகள் குழு சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

47 நாட்டு பிரதிநிதிகள் பங்கெடுத்த இந்த விவாதத்தில் 24நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்கு அளித்துள்ளன. இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகள் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தனர்.

இந்தியாவின் சதி: இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையை ஆதாரத்துடன் நிருபிக்க வாய்ப்பளிக்கும் ஒரு நியாயமான விசாரணைக்கு வழிவகுக்கும் அமெரிக்காவின் தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு சாதகமான இரண்டு திருத்தங்களைச் செய்துள்ள இந்திய அரசு, அதன் மூலம் நேர்மையான விசாரணைக்கு முட்டுக்கட்டையை உருவாக்கி உள்ளது.

Mar 20, 2012

கொந்தளிக்கும் கூடங்குளம்! மக்கள் சக்தி வெல்லுமா?

March 21: முதல்வரின் வேடம் கலைந்தது: தமிழினப்பேரழிவுத் திட்டமான கூடங்குளம் அணு உலையைத் திறக்க அனுமதிப்பதென்று முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
  
மக்கள் தலைவர் உதயகுமார்: கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்த தமிழக அரசின் வேஷம் நேற்றோடு கலைந்தது. இதையடுத்து கூடங்குளம் போராட்டக் குழுவினரைக் கைது செய்ய ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து இடிந்தகரை விரைந்த உதயக்குமார், அங்குள்ள லூர்துமாதா சர்ச் வளாகத்தில் பல்லாயிரகணக்கான மக்களுடன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.

Mar 18, 2012

சிங்கள பயங்கரவாததிற்கு ஆதரவு அளித்த RSS இயக்கம்!

March 19: ஐ.நா.,வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது.

இந்த விஷயத்தில் இந்தியா ஒரு முழுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று  ""RSS இயக்கத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ஆர்கனைசரில் செய்தி வெளியாகி உள்ளது.

இந்தியாவின் பூகோள ரீதியான நன்மையை  கணக்கில் கொண்டு, உறுதியான நிலைப்பாட்டை  எடுக்க வேண்டும். மேற்கத்திய நாடுகள் முழுமையான ஒரு கவலையுடன் இந்த தீர்மானத்தை கொண்டு வரவில்லை. ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட அரசின் விஷயத்தில், அமெரிக்காவோ, ஐரோப்பிய நாடுகளோ தலையிட வேண்டிய அவசியம் இல்லை.