March 11: சங்கரன்கோவில் தொகுதியில் 20 கிராமங்கள் அதிக பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப் பட்டுள்ளன. இதையொட்டி கூடுதலாக 16 செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் 18ம் தேதி நடைபெறுவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 242 வாக்குச்சாவடிகள் 118 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்து வருகின்றனர். மேலும் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 5 கம்பெனி துணை ராணுவம் நாளை வருகிறது.











