Feb 18, 2012

கூடங்குளம் ஒரு சிங்கள அணு குண்டு!

FEB 19: ஈழத்தமிழர்களையும், இந்திய தமிழர்களையும் அழிக்கவல்ல அணு குண்டே கூடங்குளம் அணு மின்நிலயம். சிங்கள பேரினவாதமும், இந்திய ஹிந்தி அரசும் சேர்ந்து தமிழர்களை ஒடுக்கப்பட்ட  ஒரு இனமாக ஆக்கி எந்த உரிமையும் இல்லாத அடிமைகளாக ஆட்சி செய்து வருகின்றன. 

இந்த இரண்டு பேரினவாத அரக்கர்களின் இரத்த சாட்சியே ஈழத்து இன அழிப்பும், தமிழக மீனவர் படுகொலையும், முல்லை பெரியாரும், கூடங்குளம் அணு மின்னலயமும் ஆகும். ஏன் தமிழகத்து மின்சாரத்தை கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும், ஆந்திராவுக்கும் வாரி கொடுத்து விட்டு தமிழகத்தை இருளில் மூழ்கடிக்க வேண்டும்.

Feb 17, 2012

என்று தனியும் எங்கள் சுதந்திர தாகம்!

உயிர்வதை பாவமென்ற புத்தனின் மண்ணில்
புதைந்து மடிந்தன பல்லாயிரம் உயிர்கள்..
ஈசலும் உயிர்தானே ...? ஈழவன் உயிரில்லையா ...?
பிஞ்சும் அஞ்சும் பத்தும் ...அம்பதும் அறுவதும் ..ஆணும் பெண்ணும் பேதம் தெரியவில்லை பிணக்குவியலில்
.
 
இனம் காக்க இறந்துபட்டீரே எம்உறவுகளே
மிஞ்சினோம் நாங்கள் உங்களின் தியாகத்தால் .
மாவீரர்கள் அஞ்சவில்லை ...சாவைக்கழுத்தில் கட்டிக்கொண்டும் சிரித்தனர் மக்களே ...வாழ்ந்த பொழுதிலெல்லாம் மானத்திற்கும் மரணத்திற்கும்
அஞ்சியஞ்சிச்செத்தீரே... உங்கள் உயிர்பட்டபாட்டை இப்போதுதான் அறிந்ததாய் அறிவிக்கின்றன ஊடகங்கள்.

Feb 16, 2012

ஆடாதோடை இலையும் அதன் மருத்துவ குணமும்!

ஆடாதோடை இதன் முருத்துவ பெயர் ( Adhatoda zeylanica) ஆகும். இது சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் வளரும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும்.  ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என அழைக்கப்படுகிறது.

உடலில் தசைப்பகுதிகளில் ஏற்ப்படும் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள்
இதில் இருக்கும் வாசிசின் என்னும் வேதிப்பொருள்  நுரையீரல் செல்களில் புகுந்து வேலை செய்து விரிவடைய செய்வதால் ஆஸ்த்மா, நாட்பட்ட இருமல், சளி போன்ற நோய்களை இது குணப்படுத்துகிறது.

Feb 14, 2012

ஹிட்லரும் மோடியும் ஒன்றா?

FEB 09: ஆமாம்! நாங்கள் ஒட்டிப்பிறக்காத இரட்டையர்களே.  ஹிட்லரே எனது ரோல் மாடல். ஹிட்லரிடம் இருந்துதான் நான் பாசிசம் பயின்றேன்.

அவரிடம் இருந்துதான் வெறுப்பு தத்துவத்தை (HATE POLICY)  பயின்றேன்.  பெண்களையும், வயதானவர்களையும், சிறுவர்களையும் ஈவு இரக்கமில்லாமல் கொல்வது எப்படி என்றும் கற்றுக்கொண்டேன்.

சொந்த சமூகத்தின் மக்களை நாங்களே கொன்று விட்டு அதை காரணமாக வைத்து கூட்டு படுகொலைகள் செய்வது எப்படி? அதை திட்ட மிட்டு மறைப்பது எப்படி? என்பதை எல்லாம் எனக்கு கற்று கொடுத்த ஆன்மீக குருவே ஹிட்லர்தான்.

Feb 13, 2012

காதலர் தினம் கூடுமா? காதலித்தால் பாவமா?

FEB 14: காதல் ஒரு பருவகால உந்தல். பருவ வயதை அடைந்த ஆண்,பெண் ஒருவேர்மேல் ஒருவர் கொள்ளும் ஈர்ப்பே காதல் ஆகும்.

ஒருவர் மேல் காதல் உண்டாக அழகு என்கிற புற தோற்றங்களோ அல்லது அறிவு சார்ந்த கல்வி, வீரம், விவேகம், சமூக சிந்தனைகள் போன்ற அக தோற்றங்களோ ஒரு காரணமாக இருக்கலாம்.

தனது மனதுக்கு  பிடித்தவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் காதலின் கடைசி இலக்காக இருக்கிறது. அதாவது காதல் என்பதின் கடைசி இலக்கு திருமணமே.

Feb 12, 2012

இவர்கள் டாக்டர்களா? அல்லது எமதர்மர்களா?

FEB 13: இவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். ஆந்திராவில் ஜுனியர் மருத்துவர்களின் வேலை நிறுத்தம் நீடித்து வருவதால், சிகிச்சை கிடைக்காமல் இன்று ஒரே நாளில் 44 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்

ஆந்திராவில் பயிற்சி மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் உதவித் தொகையை, 40 சதவீதம் அதிகரிக்க வேண்டும். கிராமங்களில் 3 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்பதை ஓராண்டாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2 ஆயிரத்துக்கும் அதிமான பயிற்சி மாணவர்கள் கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.