Jan 28, 2012

அணு மின்நிலையத்தின் சாவி முதல்வர் ஜெ கையிலா?

தூத்துக்குடி: ""முதல்வர் ஜெ.,நினைத்தால், கூடங்குளத்தில் மின்உற்பத்தியை உடனடியாக துவங்கிவிடலாம்''என, தூத்துக்குடி உண்ணாவிரதத்தில், அணுமின்நிலைய ஆதரவாளர்கள் பேசினர்.

இதில் தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் நாராயணன், யாதவர் பேரவை தலைவர் காந்தையா, பார்கவ குல சங்க தலைவர் ராஜன், அணுசக்தி ஆராய்ச்சியாளர் பெரியசாமி அணுஉலை ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடுவோர், மக்களை இருண்ட காலத்திற்கு அழைத்துச் செல்கின்றனர் என்று அந்த கூட்டத்தில் கலந்து கொண்டோர் பேசினார்.

சிந்திக்கவும்: என்னவோ கூடங்குளம் அணு மின்நிலையத்தின் சாவி ஜெயா கையில் இருப்பதுபோல் பேசுகிறார்கள். மத்திய அரசு ஏவி விடும் அடியாட்கள் இவர்கள். ரப்பர் ஸ்டாம்ப் அமைப்புகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து கூடங்குளம் அணு மின்நிலையத்தை ஆதரிக்கின்றனர்.



Jan 27, 2012

கேடுகெட்ட சுகாதாரத்துறை! 100 குழந்தைகள் பலி!

JAN 28: மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் கடந்த 1-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை சுமார் 100 பச்சிளம் குழந்தைகள் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

சிந்திக்கவும்: 26  நாட்களுக்குள் நூறு குழந்தைகள் சாவு என்று சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரியே ஒத்துக்கொள்கிறார் என்றால் சாவின் எண்ணிக்கை எத்தனை மடங்காக இருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள். இப்படி கேடுகெட்ட ஒரு சுகாதாரத்துறை நமக்கு தேவையா?

Jan 26, 2012

பத்மஸ்ரீ என்கிற மாயக்கண்ணாடி!

JAN 27: பத்மஸ்ரீ விருது இந்த விருது என்பது இந்திய அரசால் வழங்கப்படும் முதன்மை விருதுகளில் ஒன்றாகும். பத்ம விபூசன், பாரத ரத்னா, பத்ம பூசன் போன்ற விருதுகளுக்கு அடுத்து நான்காவது இடத்தில்  பத்மஸ்ரீ விருது அமைந்துள்ளது.

இது கலை, கல்வி, தொழில், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூகசேவை, பொதுவாழ்வில் சிறப்பான பங்களித்தல் போன்றவைகளுக்காக வழங்கப்படுகிறது. இந்த விருது 1954  ஜனவரி 2 நாள் இந்திய ஜனாதிபதியால் ஏற்ப்படுத்தப்பட்டது.

இது ஒன்றும் அப்படியே நூறு சதவீதம் திறமை உள்ளவர்களுக்கு வழங்கப்படுவதாக எண்ணிவிட வேண்டாம். இது ஆளும் வர்க்கத்திற்கும், அரசு துதிபாடுபவர்களுக்கும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கும், பெரும் செல்வந்தர்களுக்கும், சினிமா கூத்தாடிகளுக்கும் கொடுக்கப்படும் ஒரு விருதே தவிர வேறொன்றும் இல்லை.

Jan 25, 2012

குடிகெடுக்கும் குடியரசு தின கொண்டாட்டம்!

JAN 26: வெள்ளையர்களின் அடிமைத்தளையில் இருந்து விடுதலை பெற்ற 1947 ஆகஸ்ட் 15 தேதியை சுதந்திரதினமாக கொண்டாடுகிறோம்.

அது என்ன குடியரசு தினம்? சுதந்திரத்துக்கு பின்னால் நாட்டை ஆட்சி செய்ய  மக்கள் தேர்தல் மூலம் ஒரு தலைவனை தேர்ந்தெடுக்க அதற்க்கு தேவையான அரசியல் அமைப்புச் சட்டத்தை (Constitution) உருவாக்கிய 1950 ஜனவரி 26 தேதியைதான்  குடியரசு தினம் என்று கொண்டாடுகிறோம்.

Jan 23, 2012

மோடி பிரதமரானால் என்ன நடக்கும்!

JAN 24: கலவரங்களை திட்டமிட்டு நடத்துவதற்க்கேன்றே ஒரு கூட்டம் இந்தியாவில் இருக்கிறதென்றால் அது ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா வர்ணாசிரம கூட்டமே.

கலவரங்கள் என்பது உணர்ச்சி உந்தலின் அடிப்படையில் எதிர்பாராமல்  சில பிரிவினரோ, கூட்டங்களோ சண்டையிட்டு கொள்வதே ஆகும்.

இது ஒரு சில மணி நேரம் நீடிக்கும் போதிய அளவில் காவல்துறை அந்த பகுதிக்கு வந்தடைந்ததும் கலவரம் நின்றுவிடும். ஆனால்  இவர்கள் கலவரம் உண்டாக்கினால் அது நாள்கணக்கில் நடக்கும்.

Jan 22, 2012

தமிழீழமும் காஷ்மீரும் ஒன்றா? அருந்ததிராய்!

JAN 23: சமூக ஆர்வலரான அருந்ததி ராய், காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல என்கிற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.    

காஷ்மீர் இந்தியாவுடன் வலுக்கட்டாயமாக சேர்த்து கொள்ளப்பட்ட ஒரு சமஸ்தானமே அன்றி அந்த மக்கள் விரும்பி தங்களை இந்தியாவுடன் இணைத்து கொள்ளவில்லை. படிக்க ">காஷ்மீர் யாருக்கு சொந்தம்! அருந்ததிராய்!