Jan 20, 2012

தமிழகத்தை அழிக்க வட இந்தியர்கள் சதி!

JAN 21: கல்பாக்கம் அணு மின்நிலையம்மேட்டூர், தூத்துக்குடி, எண்ணூர், நெய்வேலி, சமயநல்லூர் போன்ற நகரங்களில்  அனல் மின்நிலையங்கள்

குந்தா, காடம்பாறை, மேட்டூர், பெரியாறு, சுருளியாறு, வைகை, கூடலூர், மோயாறு, போன்ற நீர் மின்னுற்பத்தி நிலையங்கள். குதிரைக்கல் மேடு கதவணை நீர் மின் நிலையங்கள்.

கயத்தாறு ,ஆரல்வாய்மொழி, தேனி, கணவாய்ப் பகுதி, ஆகிய பகுதிகளில்  உள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்கள். சிவகங்கையில் உள்ள ஒரு மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம்.

Jan 19, 2012

தமிழகத்தை தாக்க போகும் நியூட்ரினோ என்கிற பேராபத்து!

JAN 20: தேனி மாவட்டம், தேவாரம் அருகே அம்பரப்பர் கரட்டு மலைப்பகுதியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியன் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது.

நியூட்ரினோ என்றால் என்ன? அதனால் மக்களுக்கு என்ன பயன்? இதனால் ஏற்ப்பட போகும் ஆபத்துக்கள் என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.

நியூட்ரினோக்கள் என்கிற அணுத்துகள்கள் இந்த பூமி மட்டும் இல்லாது இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவிக்கிடக்கிறது.  ஏறக்குறைய நூறாயிரம் கோடி நியூட்ரினோக்கள் ஒவ்வொரு விநாடியும் நமது உடலுக்குள் புகுந்து வெளியேறிய வண்ணம் உள்ளன.

Jan 18, 2012

தினமலர் நாளிதழை செருப்பால் அடித்த மக்கள் தலைவர்!

கூடங்குளம்  அணு மின்நிலைய எதிர்ப்பு மக்கள்  தலைவர் உதயகுமார், "தினமலர்' நாளிதழுக்கு, ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். 

இதை "தினமலம்' செய்தியை யாரும், "சீரியசாக' எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று தலைப்பிட்டு மானம் கெட்ட தினமலர் செய்தியாக  வெளியிட்டு இருந்தது.

அதில் அவர் கூறியிருப்பதாவது: அடிப்படையற்ற, ரசனையற்ற, யோக்கியமற்ற செய்திகளை வெளியிடும், "தினமலம்' கருத்துத்தாளை (வியூஸ்பேப்பர்), அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கண்டிக்கிறது.

இணையதளங்களின் சுதந்திரம் பாதுகாக்கப்படுமா?

JAN 19: அமெரிக்க காங்கிரசில் இணையதள சொத்துரிமை குறித்து கொண்டு வரப்பட உள்ள இரு மசோதாக்களை எதிர்த்து நேற்று கூகுள், விக்கிபீடியா போன்ற இணைய நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன.


விக்கிபீடியா தளம் நேற்று முழுவதும் செயல்படவில்லை. கூகுள் தேடுபொறியில், அதன் பெயர் மீது பெரிய கருப்புப் பட்டை அடிக்கப்பட்டிருந்தது.

இம்மசோதாக்கள் சட்டமானால், இணையதளங்களின் சுதந்திரச் செயல்பாடுகளை முடக்கி விடும் என கூகுள், விக்கிபீடியா போன்ற இணைய நிறுவனங்கள் அஞ்சுகின்றன. அதனால், மசோதாக்களை எதிர்க்கும் வகையில் நேற்று ஒரு நாள் அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

Jan 17, 2012

பசுமை வீடுகளா இல்லை பற்றி எறியும் வயிறுகளா!

JAN 18:  சென்னை எழும்பூரில் செவ்வாய்க்கிழமை நண்பகல் ஏற்பட்ட தீ விபத்தில்,  50 குடிசைகள் எரிந்து நாசமாகின.

சிந்திக்கவும்: இந்தியா சுதந்திரம் அடைந்து 63 வருடங்கள் முடிந்து விட்டது. இருந்தும் ஏழை எளிய மக்களின் வாழ்வு மட்டும் இன்னும் உயரவில்லை. நமது பொருளாதார சூரப்புலிகள் இந்தியாவை ஹைடெக் சிட்டியாக மாற்ற போவதாக கொக்கரிகின்றனர்.

கூடங்குளம் கடலோர பகுதிகளில் வாழும் மக்களுக்கு பசுமை வீடுகள், அடுக்குமாடி வீடுகள், சமூக நலக்கூடம் மற்றும் விளையாட்டு மைதான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று நமது முன்னாள் ஜனாதிபதி கோரிக்கை வைத்துள்ளார்.

Jan 16, 2012

மன்மத குஞ்சை சுட்டுட்டேன் !


எல்லா நாட்டில்லும் நீதிமன்றங்கள் என்று ஒன்று உள்ளது அவர்கள் எடுக்கும் தீர்மானங்களை பார்த்து உலகமே சந்தோஷப்படுகிறது. 

அதே போல் ஒரு நீதி நிர்வாகம்  நம் நாட்டிலும் இருக்கிறது. அது எதை செய்கிறது, செய்து கொண்டிருக்கிறது.

இப்படி ஒரு நிர்வாகம் நமக்கு தேவையா? அன்று ஆலமரத்துக்கு கீழிருந்து இதை விட அருமையான தீர்ப்பை நம் முன்னோர்கள் கற்பித்து கொண்டிருந்தார்கள்.

நீதிமன்றங்கள் குறித்து சிந்திக்க சில உண்மைகள்:
 

பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்டது பெரிய நிகழ்வு இல்லை அது ஒரு சாதாரண விஷயம் தான்!

*  மாட்டை அறுத்தவனை கொல்வது தப்பில்லை!

Jan 15, 2012

யார் பிரதமர் ரஜினியா? ஜெயாவா?

JAN 16: சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவின் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், இந்து முன்னணி ராம.கோபாலன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் பாலசந்தர், எழுத்தாளர் குருமூர்த்தி, சோ’ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய ‘சோ’,’எதிர் வரும் லோக்சபா தேர்தலுக்குப் பின் மத்திய அரசை அமைப்பதில், அ.தி.மு.க.,வின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும். ஒருவேளை பா.ஜக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போய் கூட்டணி உருவானால் ஜெயலலிதாவை பிரதமராக்க பாஜக ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார். இதில் சிலர் ரகசியமாக ரஜினியை முன்மொழிந்துள்ளனர்.