Nov 5, 2011

புரிந்த மணிப்பூர் மக்களும்! புரியாத தமிழக மக்களும்!

NOV 06, இம்பால்: 2000ஆம் ஆண்டில் இம்பால் (மணிப்பூர்) விமான நிலையம் அருகில் உள்ள மாலோம் என்ற கிராமத்தில், அஸ்ஸாம் படையணியைச் சேர்ந்த ராணுவத்தினர், பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த கிராமத்தினர் மீது கண்மூடித்தனமாக சுட்டதில்10 பேர் கொல்லப்பட்டனர். 

இறந்தவர்களில் ஒருவர் கர்ப்பிணிப் பெண். அதற்குப் பிறகு மூன்று நாட்கள் கழித்து இதைக் கண்டித்து, இரோம் சர்மிளா தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பட்டினிப் போராட்டத்தை தொடங்கினார். இவரின்  உண்ணா விரதம் 11 ஆண்டுகளைத்தாண்டி 12வது ஆண்டை எட்டியது.

ஆயுதப்படை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஐரோம் சர்மிளா தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.   வெறும் தண்ணீரை மட்டும் உணவாக உட்கொண்டு அவர் 11 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வருவதை அங்கீகரிக்கும் வகையில் உலக நாடுகள் பல உயர்ந்த விருதுகளை வழங்கியுள்ளன.

இந்தியாவின்  வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் கடந்த 1947ம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்தது. 1972ம் ஆண்டு வரை யூனியன் பிரதேசமாக இருந்த மணிப்பூர், பின், தனிமாநிலமானது. கடந்த பல ஆண்டுகளாக, தனி நாடு கேட்டு நக்சலைட்களும், மக்களும்  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அங்கு கடந்த 1980ம் ஆண்டு முதல்,  நக்சலைட்களையும், மக்களையும்
ஒடுக்குவதற்காக ராணுவத்திற்கு “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்’ வழங்கப்பட்டது.  இந்த சிறப்புச் சட்டத்தின்படி, பொது இடத்தில் ஐந்து பேர் கூடி நின்றாலே அது பயங்கரவாத நடவடிக்கையாக கருதப்படும். ராணுவம் மற்றும் துணை ராணுவத்தைச் சேர்ந்த சாதாரண சிப்பாய்கள் கூட, தங்கள் மேலதிகாரியின் அனுமதியின்றி யாரையும் சுட்டுக்கொல்ல முடியும். அவர்கள் மீது எந்த நடவடிக்கையோ, விசாரணையோ நடத்தப்படாது.  இதே அநியாயம்தான் காஷ்மீரிலும் இந்திய ராணுவத்தால் அரங்கேற்றப்படுகிறது.

சிந்திக்கவும்: தமிழக மக்களே சிந்தியுங்கள் இதே நிலைமைதான் உங்களுக்கும் நடந்தது, நடந்து கொண்டிருக்கிறது. தமிழக மீனவர்களை சிங்கள பயங்கரவாத படை தொடர்ந்து சுட்டு கொன்று வருகிறது அதை வேடிக்கை பார்க்கிறது இந்திய அரசு. ஈழத்திலே தமிழர்கள் ஒன்றரை இலட்சம் பேர்கள் ஒருசில நாட்களில் கொல்லப்பட்டார்கள் இந்தியாவின் துணையோடும், இந்தியாவின் கனரக ஆயுதங்களோடும்.

மணிபூர் மக்கள் நமக்கு முன்பே தெரிந்து வைத்திருக்கிறார்கள் இவர்களோடு சேர்ந்து இருந்தால் நமக்கு கோவணம் கூட மிஞ்சாது என்று. அதனால்தான் தனி நாடு கேட்டு ஒரு போராட்டத்தை துவைக்கி உள்ளார்கள்.  தமிழர்களுக்கு இப்போதுதான் புரிய ஆரம்பித்துள்ளது. ஆனால் இதை நாம் புரிந்து கொள்ள  கொடுத்திருக்கும் விலையோ மிக மிக அதிகம்.

ஈழத்தமிழர்களின் 35 வருட போராட்டத்தின் மூலம் எழுப்பப்பட்ட ஒரு நாட்டையும், வீரம், மானம் உள்ள இலட்சக்கணக்கான  தமிழர்களின் உயிர்களையும், சுனாமியை கக்கும் கடலின் கோரத்தை கண்டு அஞ்சாது தினம் தினம் மீன்பிடித்து வாழ்க்கை நடத்தும் நம் மீனவ மக்களின் உயிர்களையும் விலையாக கொடுத்து நாம் இப்போது பாடம் கற்றிருக்கிறோம் தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என்று. நமக்கு இந்த படிப்பினையை தர தங்கள் உயிர்களை கொடுத்த மாவிரர்களுக்கு சுதந்திர தமிழகத்தில் குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செய்யப்படும். அவர்களது வீர வரலாறு தமிழர்களுக்கு பாடமாக ஆக்கப்படும் என்று நம்புவோம்.
-நட்புடன்: மலர்விழி-

Nov 4, 2011

மனிதம் எங்கே தொலைந்துபோனது??

எனது சகோதரன் குடும்பத்தினருடன் தமிழ்நாட்டின் முக்கிய வழிபாட்டுத் தளங்களுக்குச் சென்று கொண்டிருந்தோம். அதுவும் ஒரு பிரபலமான வழிபாட்டுத்தளம். ஒரு குழந்தையின் குதூகலத்துடன் அங்கு நடப்பவற்றை வேடிக்கைப் பார்த்தபடி நடந்துகொண்டிருந்தோம்.

அங்கு, குழந்தைகளின் விருப்பமான "டோரா " கதாபாத்திரத்தின் முகமூடியணிந்த ஒருமனிதர் குழந்தைகளைப் பார்த்து கையசைத்துக் கொண்டிருந்தார். பிள்ளைகள் அவருடன் நின்று  புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.  எங்களது பிள்ளைகளும் அவாறே விரும்ப.. அவரிடம் ரூ. 50 ஐக் கொடுத்துவிட்டு, எம் பிள்ளைகளையும் நிறுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

பின்பு மலைமேலுள்ள வழிபாட்டுத்தளத்தை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.  அந்தப் பாதையின் இருமருங்கிலும், மனநலம் பிறழ்ந்தோரும், உடற்குறைபாடுடையோரும் அமர்ந்து யாசகம் பெற்ற வண்ணமிருந்தனர். முன்பதிவு செய்திருந்தமையால் மிகக்குறைந்த   2 மணிநேரக் காத்திருப்புக்குப்பின் தரிசனம் கிடைத்ததை பெருமையாகப் பேசியபடி வந்துகொண்டிருந்தனர் அண்ணனும், அண்ணியும். 

மலையடிவாரத்தில் மீண்டும் அதே டோரா..!! ஆனால் இப்போது கூடவே ஒரு திருநங்கையும் இருந்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு மனநோயாளிப் பெண்ணை ஆட்டோவில் ஏற்ற முயன்று கொண்டிருந்தனர். அண்ணன் குடும்பத்தினர் ஏதேதோ பொருட்கள் வாங்குவதில் மூழ்க, நான் மெதுவாக டோராவை நெருங்கினேன்.

இனி நடந்தவை..  அந்த திருநங்கையிடம், "என்னம்மா உங்க உறவுக்காரப்பெண்ணா, ரொம்ப பிரயத்தனப்படுறீங்களே ஏதும் உதவி வேணுமா?" என்று கேட்டபடி என் கைப்பையிலிருந்த ஒரு சோடி வளையலை எடுத்து அந்த மனநலம் பாதித்த பெண்ணிடம் நீட்டினேன், அதை வாங்கிப் பார்த்தபடி நின்ற அவளை மெதுவாக ஆட்டோவில் ஏற்றிச்செல்ல,   டோராவிடம் பேச்சுக் கொடுத்தேன். முகமூடியைக் களைந்துவிட்டு அந்த மனிதர் பேசத் தொடங்கினார். அவரும் ஒரு திருநங்கை. அவர் சொன்னது அவரது சொற்களிலேயே..

"ஏங்க உறவு உறவுன்னு வெறுப்பேத்துறிங்க, இந்த ஊர்முழுக்க பாருங்க இந்த மாதிரி பைத்தியங்க நிறைய இருக்காங்க (பைத்தியம் என்ற   சொல்லில் எனக்கு உடன்பாடு இல்லை), இவங்க இப்படி ஆனதுக்கு நீங்க சொல்லுற உறவுங்கதான் காரணம். இவங்கள இங்க கொண்டுவந்து கழிச்சுவுட்டுப்போனதும் அதுங்கதான். இங்ககிடந்தது இதுங்கபடுற அவஸ்தை அந்தக்கடவுளுக்கே அடுக்காது..

எதை நம்பி இங்க கொண்டுவந்து விட்டுப்போறாங்க..? கடவுளையா..??,  மனசாட்சி தாங்க கடவுளு. நேத்து வரை மனைவியாவோ.. மகனாவோ.. அண்ணன், தம்பி..ஏதோ ஒரு உறவா இருந்தவங்க தானே இந்த மனுசங்களும்..  மனசு கோணிப்போனா அந்த உறவெல்லாம் மறைஞ்சு பைத்தியம்ங்கற பேரு வந்து சேந்துடுது..  மனசாட்சியில்லாத சில மனுசங்களும் இந்தமாதிரி ஏதோவொரு கோயிலு குளம்.. மசூதின்னு கொண்டுவந்து தள்ளிட்டு தலமுழுகிட்டுப்போயிடுதுக..,

ஆனா பொம்பளப்புள்ளையல கொண்டாந்து உடற ஆளுங்கள நிக்கவச்சு சுடனும்.., மனுசங்க எந்தளவுக்கு வக்கிரம் புடிச்சவங்கங்கிறது எங்களுக்குத்தான்  தெரியும் ( சொல்லும்போது அவரது கண்கள்கலங்கின. அதையும் மீறி ஏதோவொரு பயம் தெரிந்தது..).  கம்பத்துக்கு சீலயக்கட்டுனாக்கூட நாய்மாதிரி  பின்னாடியே அலைவானுங்க...
 
அதெல்லாம் பெரிசில்லீங்க..   ஏதோவொரு அதிர்ச்சியில பைத்தியமாத்திரியிற இந்தப் பொம்பளைங்களக் கூட விட்டுவைக்க மாட்டேன்கிறானுவோ..  அந்த வெறிபுடிச்ச நாய்ங்ககிட்டமாட்டி  நாராக் கிழிஞ்சுகெடக்குற பொண்ணுவோளப்பாத்தா  நெஞ்சேவெடிக்கிமுங்க,  தனக்கு என்னா நடந்திச்சு என்னா நடக்குதுன்னே தெரியாம ரோட்டோரத்துல புள்ளபெத்துக்கிடக்குற கொடுமை சொல்லிமாளாது..

வக்கத்தவன்கூட ஒருவேளை சோத்தப்போட்டு ஊட்டுல கட்டிப் போட்டுக்குறான். இந்த வசதிபடைச்சவங்க மானக்கேடுன்னு காருல கொண்டாந்து வீசிட்டுப்போயிடுறாங்க..  நீங்கள்லாம் பாத்துட்டு ரெண்டு துட்ட வீசிட்டுப்போயிடுவீங்க  மனுசங்களோட மிருககுணத்த அனுபவிக்கிற எங்களுக்கு அப்புடிபோவ மனசுவல்லீங்க, அதான் இங்கதிரியிற பொம்பளைங்கள  பக்கத்தாப்புல இருக்கற இல்லத்துல கொண்டுவிட்டுடுறோம்." 

அவர் சொல்லிமுடிக்க என் உயரம் கூனிக்குறுகி ஒரு குப்பையைப் போல உணர்ந்தேன்.  திருநங்கைகளை  அது இதென்று  அஃறிணையில்  கூப்பிடும் சில உயர்திணைகளை விட மனித உணர்வுகளுக்கு முக்கியத்து வமளிக்கும் இவர்கள் எத்துனையோ உயர்ந்தவர்கள்.  என் கையிலிருந்த சிலநூறு ரூபாய்களை மறுக்கமறுக்க சௌந்தரியின் கைகளில் திணித்தேன்.
( அந்த திருநங்கையின் பெயர் சௌந்தர்யா ) அதற்குள் யாரோ ஒருவன் " யாரு பேப்பர்காரங்களா என்று நெருங்க, வயசுப் பிள்ளைகளோடு நின்றிருந்த   சகோதரனின் முறைப்புக்கு பயந்து அந்த இடத்தைவிட்டு மனமில்லாமல் அகன்றேன்.

அதிலிருந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களைப்பார்த்தால் சௌந்தரியின் நினைவுவர அருகிருக்கும் இல்லத்தைவிசாரித்து தகவல் சொல்வதை கட்டாயமாக்கிக்கொண்டுள்ளேன்.
நம்முள்ளிருக்கும் மனிதம் எங்கே தொலைந்துபோனது??

எந்த விலங்கும் விருப்பமில்லாத இன்னோர் விலங்கைப் புணர்வதில்லை , எந்த விலங்கும் நோயுற்ற விலங்கைப் புணர்வதில்லை.. என்னதான் உணர்ச்சி உந்தினாலும் எந்த விலங்கும் மழலை விலங்கைப் புணர்வதில்லை.. ஏன் மனிதன் மட்டும் அதனினும் கீழாகப் போய்விட்டான்??

தினசரி செய்திகளில் வரும் பெண்மீதான வன்புணர்வு கொடுமைகளும், குழந்தைகளைக்கூட விட்டுவைக்காத (மிருக்கத்தனம் என்று சொல்லக்கூடாது)   மனிதவெறியும், ஒரு சமூகத்தை ஒடுக்க அதன் பெண்களின் மீது கட்டவிழ்க்கப்படும் பாலியல்வன்முறைகளும் எம் மனதைப் பதறவைக்கின்றன. இவற்றுக்கு என்னதான் தீர்வு??

இவ்வாறான இவாறான செயல்களில் ஈடுபடும் கொடியவர்களுக்கு  உடனடியாக, மிக அதிபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். கொடுஞ்செயல் நடந்தபின் தண்டிப்பது மட்டும் தான் தீர்வா?? அவை நடவாமல் தடுப்பதும் நமது கடமையே,  அடிப்படை  மனித்தத்துடன் நடந்துக்கொள்வோம்.  நம் பிள்ளைகளுக்கு வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். கண்டுங்காணாமல் கண்மூடிப்போகாமல் கொடுமைகளை எதிர்ப்போம். அநீதிக்கெதிராய் ரௌத்திரம் பழகுவோம் !! 


ரௌத்திரம் பழகு
...யாழினி...

Nov 2, 2011

இந்தியா உடையும்! ஆனா உடையாது!

இந்தியா ஏன் உடைய வேண்டும்! என்னடா இப்படி ஒரு பீடிகையோடு ஆரம்பிக்கிறேனே  என்று பார்கிறீர்களா? அதுதான் நான் கொண்டிருக்கும் தேசபதியின் உச்சம். என்ன குழப்பமாக இருக்கிறதா?

என்னடா ஒருபுறம் இந்தியா ஏன் உடைய வேண்டும் என்று பீடிகை போடுகிறேன். மறுபுறம் அதுதான் எனது தேசபக்தியின் உச்சம் என்றும் சொல்கிறேனே என்று குழப்பமாக உள்ளதா? நான் சொன்ன என் தேசபத்தி என்பது எனது தனித்தமிழ் நாட்டின் தேசபக்தி. நான் இந்தியாவுக்கு அந்நியன் என்கிற தேசபக்தி. 

இந்தியா ஏன் உடைய வேண்டும்?  உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று  எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர்  பழங்குடி மக்களின் மீது  நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.

1)  ஈழத்து பிரச்சனை: தனக்கு சொந்தமான ஒரு மாநிலத்தில் வசிக்கும் ஆறரை கோடி மக்களின் உணர்வுகளை காலில்போட்டு மிதித்து அந்த மக்களின் உறவுகளை ஈழத்திலே கொன்று குவிக்க காரணமாக அமைந்தது.  அமைதிப்படை என்ற ஆக்கிரமிப்பு பயங்கரவாத படையை அனுப்பி எமது உறவுகளை கொன்று, எம்குல பெண்களை கற்பழித்தது.

2) தமிழக மீனவர்கள் பிரச்சனை: சிங்கள பயங்கரவாத ராணுவம் எமது மீனவர்களை சுட்டு கொல்லவதை வேடிக்கைப்பார்த்தது அதற்க்கு துணை போனது.  தனது ஆட்சியின் கீழ் உள்ள ஒரு மாநிலத்தின் மக்களை பாதுகாக்க தவறியது. எம்மீனவர்களை சுட்டுக்கொல்லும்போது எங்கே போனது இந்திய கப்பல் படை, கடலோர பாதுகாப்பு படை இவையெல்லாம் சிங்கள பயங்கரவாத படைக்கு விளக்கு பிடிக்கவா? அப்படி கேட்க்க தோன்றுகிறது.

3) காஷ்மீர் பிரச்சனை: இந்தியா சுதந்திரம் பெற்ற  சமயத்தில் காஷ்மீர்  மன்னராக  ராஜா ஹரி சிங் இருந்தார்.  காஷ்மீர் தனிநாடாக விளங்கியது. பின்னர் பாகிஸ்தான் காஷ்மீரில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்வதால் அதை தன்னோடு இணைத்துக்கொள்ள திட்டமிட்டது. பயந்து போன ராஜா ஹரி சிங்  இந்தியாவிடம் உதவிகோரினார். இந்திய படைகள் காஷ்மீர் போனது இதில் இந்திய கைவசம் வந்த பகுதி ஜம்மு காஷ்மீர் என்றும் பாகிஸ்தான் கைவசம் போன பகுதி ஆசாத் காஷ்மீர் என்றும் ஆகிப்போனது.

தனக்கு சொந்தம் இல்லாத ஒரு நாட்டின் மீது உரிமை கொண்டாடி  பல லட்சம் கோடிகளை செலவிட்டு மக்களின் வரிபணத்தை விரயம் செய்து வருகிறது இந்தியா. இந்திய ராணுவத்தில் பெரும்பகுதி காஷ்மீரில் நிறுத்தப்பட்டுள்ளது.  லட்சக்கணக்கில் காஷ்மீர் மக்கள் கொல்லப்பட்டும், காஷ்மீர் பெண்கள் கற்பழிக்கப்பட்டும் இந்திய ராணுவம் காஷ்மீரில் நடத்திய வெறியாட்டத்தை எழுத பக்கங்கள் போதாது.

4) சத்தீஸ்கர் பழங்குடி மக்கள் பிரச்சனையை: அந்நிய முதலாளிகளுக்கு பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கனிம வளங்களை  தாரைவார்த்து கொடுக்க அந்த மக்கள் மேல் ராணுவத்தை பயன்படுத்தி ஒரு போரை நடத்தி வருகிறது இந்தியா. நாட்டின் குடிமக்களுக்கு எதிராக நடத்தப்படும் போர். அவதார் படத்தை பார்த்து வாய்பிளக்கும் நாம் இதே கொடுமைதான் இந்திய அரசால் சத்திஷ்கர் பழங்குடி மக்களுக்கு எதிராக நடத்தப்படுகிறது என்பதை மறந்து போனோம்.

5) போபால் விசவாய்வு தாக்குதல்: போபால் விசவாய்வு கசிவால் பல்லாயிரக்கணக்கில் மக்கள் மடிந்ததும் அந்த மக்களுக்கு இன்றுவரை நீதி மறுக்கப்பட்டு வருவதும் அவர்களுக்கு உண்டான நஷ்டஈடு இன்றுவரை சரிவர வழங்க படாததும்மான  தொடரும் அநீதிகள். இதில் முக்கிய குற்றவாளியான் அமெரிக்காவை சேர்ந்த அன்ருசன் தப்பி செல்ல வழிவகை செய்ததும் கொடுமையோ கொடுமை.

6) பாபர் மசூதி இடிப்பு: ஒரு மதசார்பற்ற நாட்டில் சிறுபான்மை  மதத்தின் வழிபாட்டு தளத்தை பெரும்பான்மை   மதத்தை சேர்ந்த மதவெறியர்கள்  நீதிமன்றத்தில் வழக்கு இருக்குபோதே உடைத்து நொறுக்குவதும் ஆன வினோதம். அதை  வேடிக்கைபார்த்து கொண்டிருந்த  ஒரு நாட்டின் பிரதமர், ஜனாதிபதி, மற்றும் மத்திய, மாநில அரசுகளும் துணை ராணுவமும் இந்த கொடுமை எந்தநாட்டிலும் நடக்காதது. ஒரு நாட்டின் பிரதமரை பாதிப்புக்கு உள்ளான மக்கள் தொடர்பு கொள்ள முடியாதபடி பிரதமர்  ஒளிந்து கொண்டதும் உலகில் எங்கும் காண முடியாத அற்புதங்கள்.

7) குஜராத் இனப்படுகொலை: நாட்டின் ஒரு பகுதியில் கலவரம் என்கிற பெயரில் ஒரு இரத்த வெறியாட்டம் நத்தப்படுகிறது அதை தடுக்க  வழியில்லாமல் வேடிக்கை  பார்க்கிறது  மத்திய நடுவண் அரசும், அதன் நுண்ணறிவு பிரிவான உளவுத்துறையும். பல்லாயிரக்கணக்கில் மக்கள் எரித்தும், வெட்டியும், கொல்லப்பட்ட அவலம் அதை தடுக்க துப்பில்லாத ஒரு நாடு.

சொந்த நாட்டின் குடிமக்களை பாதுக்காக்க துப்பில்லாத ஒரு நாடு. அந்நிய நாடுகளின் விவகாரங்களில் தலையிடுகிறது. இலங்கை தமிழர்கள் சிங்கள பேரினவாதத்தால் பாதிக்கப்பட்டு வேறு வழியே இல்லாமல் ஒரு ஆயுத போராட்டத்தை துவங்கி அதன் மூலம் ஒரு நாட்டையும் அமைக்கிறார்கள் இதை பொறுக்காத இந்தியா அந்த போராட்டத்தை நசுக்க ஆயுதஉதவி செய்கிறது. சொந்த நாட்டு மக்களை பாதுகாக்க துப்பில்லை  இதில் அந்நிய நாட்டு விவகாரங்களில் தலையீடு வேறு.

நாடு என்பது அதில் வசிக்கும் மக்களின் நலன்களுக்காகத்தான். மக்களின் நலன்களை கொன்று, மக்களை கொன்று ஒரு நாடு வளர்கிறேன் பேர்வழி என்று சொன்னால் அதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. பெரிய நாடக வைத்து அதை ஆட்சி பண்ண முடியாத போது அது பிரிந்து, உடைந்து போடுவதே   சாலச்சிறந்தது.

குடிமக்களுக்கு எதிராக போரும், குடிமக்களை பாதுகாக்க முடியாத நிலையும்,  அடுக்கடுக்கான  துரோகங்களையும், கீழறுப்பு வேலை களையும் செய்வதற்கு என்று ஒரு நாடு தேவையா? என்பதே சராசரி மனிதனுக்குள் எழும் கேள்வி. அதற்க்கு பதிலாக அது உடைந்து சிறு அரசுகள் தோன்றினால் போதுமே. சும்மா மனித நேயத்தை கொன்று புதைத்து விட்டு போலி தேசபக்தி முகமூடிதான் போடுவேன் என்று சொல்பவர்கள் சிந்திக்கவும்.

நட்புடன் : மலர்விழி.

Oct 31, 2011

RSS இயக்கத்தின் சூலாயுதமும்! விஜய்யின் வேலாயுதமும்!

NOV 01: கடந்த சிலவருடங்களாக தமிழகத்தில் இஸ்லாமிய எதிர்புணர்வை ஏற்ப்படுத்த, ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை குலைக்க உன்னைப்போல் ஒருவன், வேலாயுதம் போன்ற படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருகின்றன.

இவைஅனைத்தும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் சதி செயலாகவே பார்க்க முடிகிறது. தமிழகத்திலே தங்கள் இயக்கங்களை வளர்க்க ஹிந்துத்துவா சக்திகள் தொடர்ந்து முயன்று வந்தன. பெரியார், அண்ணா போன்ற சீர்திருத்தவாதிகளின் கடுமையான உழைப்பின் காரணமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் தமிழகத்தில் சரியாக கால்பதிக்க முடியாத ஒரு சூழல் இருந்து வந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்பவே இஸ்லாமிய எதிர்புணர்வை ஏற்ப்படுத்தும் இதுபோன்ற படங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

ஹிந்துத்துவா இயக்கத்தை ஒரு மாநிலத்தில் வேரூன்ற செய்ய வேண்டும் என்றால், அவர்களுக்கு இஸ்லாமிய எதிப்புணர்வு என்கிற சக்தி தேவைபடுகிறது. அந்த சிந்தனையை ஏற்படுத்தவே ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்கள் தமிழ் சினிமாவை பயன்படுத்தி வருகின்றன. இதன் மூலம் தங்கள் ஹிந்துத்துவா சித்தாந்தத்தை  தமிழகத்தில் பரப்பவும் அதேநேரம் முஸ்லிம் எதிர்ப்பு வெறி உணர்வை ஏற்படுத்தவும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. இதன் ஒரு பகுதிதான் ஜிஹாத் மற்றும் முஸ்லிம் பயங்கரவாதம் என்ற பூச்சாண்டி எல்லாம்.

இந்தியா முழுவதும் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கமே என்பது நிரூபனமான பின்னரும் அதை பற்றி எந்த சினிமாவும் வாய்திறக்க வில்லை. இப்படி இருக்க இஸ்லாமிய எதிர்புணர்வை  ஏற்படுத்தும் இதுபோன்ற
படங்களை எடுத்து  ஹிந்துக்கள் உள்ளத்தில் முஸ்லிம்களை பற்றிய HATE POLICY (வெறுப்புணர்வு) உண்டாக்கி இதன் மூலம் தங்கள் ஹிந்துத்துவா சித்தாந்தத்தை தமிழகத்தில் பதிக்கும் ஆர்.எஸ்.எஸ். யின் செயல்திட்டமே இது.

ஈழத்திலே தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள், தமிழகத்திலே தமிழக மீனவர்கள் கொல்லப்படுகிறார்கள், இதை பற்றி காட்ட எந்த சினிமாவுக்கும் துப்பில்லை. நமது ஹிரோக்களுக்கும்,  தயாரிப் பாளர்களுக்கும் பயங்கரவாதி ராஜபக்சேவிடம் இருந்து தமிழர்களை காப்பது போல் படம் எடுக்க முடியவில்லை. சமகாலத்தில் நடந்த ஒரு கோரத்தை பற்றி சொல்லி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட்டு விட்டு கலவரம் செய்ய ஆர்.எஸ்.எஸ்.க்கு துணை போவதேன்?

இது போன்ற படங்களை எடுக்க ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பின்னணியில் இருந்து பொருளாதார உதவிகளை செய்து வருகின்றது என்றே நம்பத்தோன்றுகிறது. அத்வானியின் தமிழக வருகையும் விஜய்யின் வேலாயுதம் படம் வெளியீடும் ஒரு கலவரத்துக்கான ஒத்திகையாகவே நம்மால் பார்க்க முடிகிறது.

நட்புடன்: ஆசிரியர் புதியதென்றல்.

Oct 30, 2011

அவமதிக்கப்பட்ட அபுல்கலாமும் தூக்குமேடையில் தமிழர்களும்!

OCT 31, அனைத்து ஊடகங்களாலும் பரபரப்பாக பேசப்பட்டு மறக்கப்பட்ட ஒரு விடயம்தான் சாந்தன், பேரறிவாளன், முருகன் கருணை மனு நிராகரிப்பு. மறந்த மக்களுக்கு நினைவுபடுத்தவே இந்த பதிவு.

கொலையாளி கொலையாளி என்கிறார்களே எந்த வகையில் அவர்கள் கொலையாளிகள். சிபிஐ ன் சிரேஸ்ட புலனாய்வாளரே சொல்கிறார் புலிகள் செய்யும் விடயங்களில் உச்ச கட்ட ரகசியம் காக்கப்படும் என்று. அப்படியானால் மின்கலம் வாங்கிக் கொடுத்த பேரறிவாளனுக்கு எப்படித் தெரியும் தான் ஒரு வெடிகுண்டு தயாரிக்கத்தான் இதை வாங்கி கொடுக்கிறோம் என்று.

அது இருக்கட்டும் சாந்தன் சிவராசனின் கூட்டாளி என்ற குற்றச்சாட்டை சொல்கின்றனர் அதனால் கொலைக்கு உடந்தையாகியிரப்பாராம். மற்றவர் கதைகளும் இதே மாதிரித்தான். ராஜீவ் செய்த கொலைகள், கற்பழிப்போடு ஒப்பிடுகையில் அவர் குடும்பமும் சம்பந்தப்பட்டிருக்கும் தானே அவர்களை ஏன் தூக்கில் விடக் கூடாது. எத்தனை கொலைகள்? எத்தனை கற்பழிப்புக்கள்? எத்தனை பேரை சுட்டு கொன்றார்கள்? எத்தனை பேரை உயிரோடு கொளுத்தினார்கள்? செய்தது யார் எமக்கு அமைதி தேடித்தர வந்த அமைதிப்படை.

இதே கொலையாளிகள் என்று சொல்லப்படுபவர்களின் கருணை மனுவை மேன்மைதகு ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் இவர்கள் ஏற்கிறேன் எனவும் அவர்கள் அனுபவித்த தண்டனை போதும் எனவும் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இப்படி ஒரு நாட்டின் ஜனாதிபதியால் பதவியில் இருக்கும் போது அங்கிகரிக்கப்பட்ட ஒரு கருணை மனுவை அவர் பதவியை விட்டு விலகியதும் நிராகரிப்பது எந்த வகையில் நியாயம். இதுதான் இந்தியாவின் அணுசக்தி தந்த மேதைக்கு இந்தியா கொடுக்கும் மரியாதையா?

OH MY GOD! என் மறதியை என்னவென்று சொல்வது நமது ஜனாதிபதி தமிழன் ஆச்சே! தமிழனை என்று வடநாட்டுக்காரன் மதித்தான். தனது தேவைக்கு கறிவேப்பிலை போன்று பயன்படுத்தி கொள்வான் அவ்வளவே. வடநாட்டானுக்கு வால் பிடித்து அழிந்தவர் தான் தமிழர்களில் அதிகம். உதாரணத்துக்கு தமிழ் நாட்டில் பல அரசியல்வாதிகளை சொல்லலாம். தமிழனுக்கு பிரச்சனை வரும்போது வடநாட்டுகாரன் வாய்மூடி மவுனம் காப்பான் என்பது ஈழத்து பிரச்சனை முதல் மீனவர் பிரச்சனை வரை நிரூபனம் ஆகியது.

அதனால்தான் பெரியார் முதல் அண்ணா வரை எல்லோரும் தனி தமிழ்நாடு என்பதையே தங்கள் லட்சிய கனவாக கொண்டிருந்தார்கள். சாந்தன், பேரறிவாளன், முருகன், இவர்களை தூக்கில் போட அனுமத்தித்தால் தமிழா உனக்கு மனம், சூடு, சுரணை என்பதே இல்லை என்று ஆகும். சாந்தன், பேரறிவாளன், முருகன் மற்றும் சிறையில்வாடும் தமிழர்களை மீட்க்க ஒவ்வொரு தமிழனும் முன்வரவேண்டும். மறதி மக்களின் நியதி நினைவூட்டுவது எங்களது கடமை. மீண்டும் மீண்டும் நாம் போராட்டங்களை நடத்தினாலே நம்மால் அவர்களை வெளியே கொண்டுவர முடியும்.

இலட்ச்சக்கணக்கில் போராளிகளையும், பொதுமக்களையும் நம் கண்ணெதிரே சிங்கள பயங்கரவாதிகள் கொல்வதை வேடிக்கை பார்த்து மவுனம் காத்தோம். இப்போது நம் கண்ணெதிரே தூக்கிலிட துடிக்கும் கயவர்களிடம் இருந்து நம் தமிழ் மக்களை மீட்ப்போம். இது ஒவ்வொரு தமிழனும் ஏற்கவேண்டிய உறுதி மொழி. இதுவே நாம் நம் உறவுகளின் காயங்களுக்கு நாம் இடும் முதல் மருந்து. அப்போ இரண்டாவது மருந்து என்ன வென்று கேட்கிறீங்களா? அதுதான் இந்தியா நமது அண்டைய நாடு? இதுதான் ஒன்றரை இலட்சம் உறவுகளை துடிக்க துடிக்க கொல்ல காரணமாக இருந்த இந்தியாவுக்கும் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கும் நாம் இடும் நல் மருந்து.
-மலர்விழி-