Mar 18, 2012

சிங்கள பயங்கரவாததிற்கு ஆதரவு அளித்த RSS இயக்கம்!

March 19: ஐ.நா.,வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது.

இந்த விஷயத்தில் இந்தியா ஒரு முழுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று  ""RSS இயக்கத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ஆர்கனைசரில் செய்தி வெளியாகி உள்ளது.

இந்தியாவின் பூகோள ரீதியான நன்மையை  கணக்கில் கொண்டு, உறுதியான நிலைப்பாட்டை  எடுக்க வேண்டும். மேற்கத்திய நாடுகள் முழுமையான ஒரு கவலையுடன் இந்த தீர்மானத்தை கொண்டு வரவில்லை. ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட அரசின் விஷயத்தில், அமெரிக்காவோ, ஐரோப்பிய நாடுகளோ தலையிட வேண்டிய அவசியம் இல்லை.

இலங்கை அரசுக்கு எதிராக, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை கூறும் போது, அவர்களுக்கு எதிராக சண்டையிட்ட விடுதலைப் புலிகளை அமைதியானவர்கள் என்றோ, ஆயுதமற்றவர்கள் என்றோ கூற முடியாது. நவீன துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், டாங்குகள் என, முழுமையான படைக்கலம் அவர்களிடம் இருந்தது.

சிந்திக்கவும்:  காந்தி படுகொலை, தொடர் குண்டு வெடிப்பு, மதக்கலவரங்கள்  என்று இந்தியாவில் பல பயங்கரவாத செயல்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வந்த ஒரு இயக்கம்தான் RSS இயக்கம். ஒரு பயங்கரவாததிற்கு இன்னொரு பயங்கரவாதத்தால் தான் துணை போக முடியும் என்பதை இதன் மூலம் RSS நிரூபித்துள்ளது.

RSS இயக்கத்தின் அடிவருடிகளான  சுப்பிரமணிய சுவாமி, மற்றும் பார்பன கூட்டங்கள் ஈழத்து இன அழிவுக்கு எதிராக ராஜீவ் காந்தி கொலையை காரணமாக சொல்லி அதை திசை திருப்ப முயன்றனர். வசதியாக ராஜீவ் அமைதிப்படை என்கிற கொலைகார படை மூலம் நடத்திய அக்கிரமங்களை மறைத்தனர்.

ஈழத்திலே அமைதி ஏற்படுத்துகிறோம்  என்று சொல்லி அப்பாவி மக்களை, பெண்களை, குழந்தைகளை  கொன்று குவித்து, பெண்களை கற்பழித்து மானபங்கப்படுத்தி கொடூரங்களை நிகழ்த்திய ஒரு கேவலமான படையை அனுப்பி பிரதமர் என்கிற ஒரு உயர்பதவியை பயன்படுத்தி பயங்கரவாத செயல்புரிந்தார் ராஜிவ்காந்தி.

மேற்கத்திய நாடுகள் முழுமையான ஒரு கவலையுடன் இந்த தீர்மானத்தை கொண்டு வரவில்லை என்று  கூறுவது  குஜராத் இனப்படுகொலை, காஷ்மீரில் ராணுவ பயங்கரவாதம், சத்திஸ்கரில் பழங்குடி மக்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை போன்றவற்றை நடத்திய ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்தியா நிகழ்த்திய பயங்கரவாதங்கள் வெளிஉலகிற்கு வந்துவிடுமோ என்கிற அச்சம்.

இலங்கையில் நடந்த போர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தை தொடர்ந்து இந்தியாவில் நடந்த மதக்கலவரங்களும், ராணுவ, மனித உரிமை மீறல்களும் உலக அரங்கில் கொண்டு செல்லப்படும். ஏற்கனவே மோடிக்கு அமெரிக்காவுக்கு போவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பல்வேறு பெயர்களில் இயக்கங்கள் நடத்தி நிதிவசூல் செய்து வருகிறது RSS இயக்கம்.  உலக அரங்கில் RSS ஒரு  பயங்கரவாத இயக்கம் என்று வெளிப்படையாக அறிவிக்கப்பட்டால் அதன் நிதிவருவாய் நின்றுபோகும் என்கிற பயம்.

ஹிந்துக்களை, ஹிந்து கோவில்களை பாதுகாக்கிறோம், ராமருக்கு கோவில் கட்ட போகிறோம் என்று சொல்லி மசூதியை இடித்த சூரப்புலிகள் இப்போது யாழ்பாணத்தில் இருக்கும் கோவில்களை இடித்து அதில் புத்த விகார் காட்டுகிறான் சிங்கள வெறியன். அதை குறித்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் அவர்களின் பரிவாரங்களான இந்து முன்னணி, பஜ்ரங்தள், சிவசேனை, இந்து மக்கள் கட்சி என்று ஒருத்தனும் வாய்திறக்க வில்லை.

ஈழத்திலே கொல்லப்பட்டது ஹிந்துக்கள் இல்லையா?  ஈழத்து ஹிந்துக்களால் தங்களுக்கு ஒரு  லாபமும் இல்லை அதுதான் இந்த மவுனத்திற்கு காரணம். இது இந்தியாவை ஆட்சி செய்ய பிராமணர்கள் போட்ட ஹிந்து முகமூடி. ஆனால் கஷ்மீர் இந்துக்களை பற்றி மட்டும் ரொம்ப கவலைப்படுவார்கள் ஏன் என்றால் அது  உயர் ஜாதி பண்டிட்டுகள் ஆட்சே. ஜாதிகொடுமையால் கொல்லப்படும் தலித் மக்கள் குறித்து பேசமாட்டார்கள். அதுகுறித்து கேட்டால்? ஜாதி ஏற்றத்தாழ்வு வேண்டும்! ஆனால் ஜாதி கொடுமை கூடாது என்று விநோதமாக பதிலளிப்பர்.


இலங்கையில் பல்லாயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அதுகுறித்து நீதி விசாரணை தேவை என்பதை மனித நேயம் கொண்ட யாராலும் மறுக்க முடியாது.  போரில் கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் அனைத்தும் அங்கே மீறப்பட்டுள்ளது. இதை சானல் 4  வீடியோ ஆவணம் தெளிவாக விளக்குகிறது. தீர்மானத்தை யார் கொண்டுவருகிறார்கள் என்பது இங்கே முக்கியம் அல்ல அந்த மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதையே மனித நேயம் கொண்ட ஒவ்வொருவரின் கருத்தாகும்.

    *மலர்விழி*                         

Mar 15, 2012

இந்தியாவை புறக்கணிப்போம்! BOYCOTT INDIA!

March 16: தண்டிக்கப்படாத குற்றங்கள் என்ற பெயரில் சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள கானொளியில் இடம்பெற்றுள்ள தமிழர் படுகொலை காட்சிகள் உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.  

அதில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் திட்டமிட்ட அடிப்படையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதும் காட்டப்படுகிறது.

இப்படியாக உலகமும் தமிழகமும் கொந்தளித்து கிடக்கும்போது தீரமானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று உண்மையிலேயே குரல் எழுப்புவது யார்? போலியாக நடிப்பவர்கள் யார் என்பதையும், தமிழ் நாட்டில் இருந்து கொண்டே தமிழ் மொழி பேசிக்கொண்டு சிங்களவனாக வாழும்  சுப்பிரமனிய சுவாமி குறித்தும் பார்ப்போம்.

Mar 14, 2012

நீலிக்கண்ணீரா? நிஜக்கண்ணீரா?

March 15: ஜெனீவாவில் நடந்துவரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரானத் தீர்மானம் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ளது (Promoting Reconciliation and Accountability in Sri Lanka). 

இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் இயக்கங்களாலும், உலகெங்கும் உள்ள மனித உரிமை அமைப்புகளாலும் வலியுறுத்தப்படுகிறது. 

Mar 13, 2012

ஈழமக்களுக்கு எதிராக செயல்படும் தினமலர்!

March 14: அமெரிக்காவிற்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சிகள்  ஆர்ப்பாட்டம் என்று ஒரு செய்தியை எழுதி தினமலர் தன் அரிப்பை தீர்த்து கொண்டுள்ளது.

நல்ல விஷயத்தை யார் செய்தாலும் ஆதரவு தெரிவிக்க வேண்டியதுதானே. கம்யூனிஸ்ட் என்றால் அமெரிக்க எதிர்ப்பு பேசி அதை காரணமாக வைத்து இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டு வரும் தீர்மானத்தையும் எதிர்க்க வேண்டுமா என்ன? அப்படி செய்யவேண்டும் என்பதே தினமலரின் எண்ணம்.

Mar 12, 2012

மானம் கெட்ட தமிழனும்! மானம் உள்ள பீகாரிகளும்!


March 13: பீகார் மாநிலம், அவுரங்காபாத் அருகில் உள்ள நாபி என்ற இடத்தில் பீகார் மாநில அரசு 1800 மெகாவாட் உற்பத்தி திரன் கொண்ட அனல் மின்நிலையம் அமைத்து வருகிறது.

நாபியில் உள்ள பொது மக்களும் இந்த இடத்தில், அனல் மின்நிலையம் அமைக்க வேண்டாம் என்று போராடி வருகிறார்கள். (கவனிக்க வேண்டியது கூடங்குளம் அணு மின்நிலையம்  நாபி அனல் மின்நிலையம்).
 
இந்த நிலையில், தமிழகத்தில் திருச்சி மற்றும் இராணிப்பேட்டை ஆகிய இரண்டு இடங்களில் உள்ள பெல் நிறுவனத்திலிருந்து பீகார் மாநிலத்தில் அமையும் அந்த அனல் மின் நிலையத்துக்கு தேவையான தளவாட பொருட்களை ஏற்றிக்கொண்டு 60 லாரிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் புறப்பட்டது.

Mar 10, 2012

சங்கரன்கோவிலில் நடப்பது தேர்தலா? போர்களமா ?

March 11: சங்கரன்கோவில் தொகுதியில் 20 கிராமங்கள் அதிக பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப் பட்டுள்ளன. இதையொட்டி கூடுதலாக 16 செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் 18ம் தேதி நடைபெறுவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 242 வாக்குச்சாவடிகள் 118 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்து வருகின்றனர். மேலும் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 5 கம்பெனி துணை ராணுவம் நாளை வருகிறது.

Mar 8, 2012

இந்தியாவின் மானம் சந்தி சிரிக்கிறது!

March 09: அமெரிக்காவில் இந்திய தூரக அதிகாரியாக பணிபுரிபவர் நீனா மல்கோத்ரா. இவர் கடந்த 2006  ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து வீட்டு வேலைகள் செய்ய சாந்தி என்கிற பெண்ணை அழைத்து வந்தார்.

அமெரிக்கா வந்ததும் அந்த பெண்ணின் பாஸ்போர்டை பறித்து வைத்துக்கொண்டார். அதுமட்டுமல்லாது அவருக்கு ஓய்வு கொடுக்காமல் தொடர்ந்து வேலை வாங்கினார். மேலும் அவருக்கு சரியான உணவும்,  தாங்கும் இடம் வசதியும் செய்து கொடுக்காமல் துன்புறுத்தியுள்ளார்.

Mar 6, 2012

மாவேஸ்ட் தோழர்களை வரவேற்கும் தமிழகம்!

March 07: இந்தியா என்கிற வல்லாதிக்க அரசால் தமிழக மக்கள் தொடர்ந்து பாதிப்புகளுக்கும், இன்னல்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள்.

ஈழத்தமிழர் விசயத்திலே ஆகட்டும், தமிழக மீனவர்கள் படுகொலை விசயத்திலே ஆகட்டும், முல்லை பெரியாறு விசயத்திலே ஆகட்டும், காவரி நதிநீர் பிரச்சனையிலே ஆகட்டும், தொடர்ந்து தமிழர்கள் இந்திய வல்லாதிக்க அரசால் புறக்கணிக்கப்பட்டு,  ஒடுக்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்டு வருகிறார்கள்.

ஈழத்தமிழர் விவகாரத்தை உலகிலேயே பேச அதிக உரிமை படைத்த ஒரு நாடு இந்தியா மட்டும்தான். அப்படி இருந்தும் அதை பேசாமல் சிங்கள பேரினவாதத்திற்கு துணை புரிந்து ஒரு மாபெரும் மக்கள் படுகொலையை நடத்த காரணமாக அமைந்தது இந்தியா. தனது நாட்டில் உள்ள ஆறரை கோடி மக்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்தது.

Mar 5, 2012

பெண்களை அவமதிக்கும் பேய்களா ஆண்கள்!

மனம் வரைந்த கோலங்களை சிதைத்து விடுகிறது
சிலருக்கு  மணக்கோலம்

காதலித்த தவறுக்கு பனிஷ்மென்ட் டிரான்ஸ்பர்
உடனே திருமணம்

கருத்தில் முரண் படுபவனோடு  கட்டிலில் உடன்பாடு ....பரிதாப ஜீவனாய் கற்புக்கரசிகள்.

மனம் நிறைய கணம்  கை நிறைய பணம்
ATM எந்திரமாய் சம்பாதிக்கும் பெண்கள்

மணவரை நுழைந்து  கருவரையை  நிறைத்து கொண்டதால்
கலாச்சார கல்லறைக்குக்  கால்வாய் இன்றும் பெண்கள்

Mar 4, 2012

அறியாமையின் உச்சத்தில் காயல்பட்டினம்!

March 5: தூத்துக்குடி மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஒரு ஊர்தான் காயல்பட்டினம்.

இது படிப்பறிவு பெற்ற மக்களை, பெரும் செல்வந்தர்களை, தொழில் அதிபர்களை கொண்ட ஒரு ஊர். இவர்கள் உலகம் முழுவதிலும் பல்வேறு வியாபாரங்கள் மற்றும் வேலைகளில் பரவிக்கிடந்து அளப்பரிய அந்நிய செலவாணியை இந்தியாவுக்கு கொண்டு  வருபவர்கள்.

ஒரு காலத்தில் இந்த ஊரில் வாழ்ந்த அறிஞர்கள் மக்கள் பணிகளில் முன்னோடிகளாக திகழ்ந்தார்கள். அப்படிப்பாட்ட ஊரில் இருந்து சிலர்  நமது விஞ்சான வடிவேலு அபுல் கலாமின் தம்பிகள் ஆகி கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க வேண்டும் என்று கூப்பாடு போடுகின்றனர்.

Mar 3, 2012

முதல்வரின் முகத்திரை கிழிந்தது!

சென்னை, மார்ச் 4: கூடங்குளம் அணு மின் நிலயத்தை தொடங்க தமிழக அரசு முழு  ஒத்துழைப்பை வழங்கி வருகிறது என்று  மத்திய அமைச்சர்  நாராயணசாமி கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது, போராட்டக்காரர்களைக் கைது செய்ய வேண்டும். 12 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போராட்டக்காரர்களுக்கு உதவுகின்றன. இதில் 3  தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து பணம் பெற உள்துறை அமைச்சகம் தடை விதித்தது. இவர்கள் மீது 4 வழக்குகள் போடப்பட்டுள்ளன.

2 வழக்குகளை சிபிஐ-யும், 2 வழக்குகளை தமிழக அரசும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் மின் உற்பத்தியைத் தொடங்கக் கோரி, தமிழக மக்களிடமிருந்து மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதங்கள் வருகின்றன. போராட்டக் குழுவினர் தங்கள் போராட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையெனில், இவர்கள் மீது கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும்.

Mar 2, 2012

கீற்று இணையதளத்தை மிரட்டிய உளவுத்துறை!

March 03: கீற்று இணையத்தளம் தமிழ் மக்களால், வாசகர்களால் போற்றப்படும் ஒரு சிறந்த மக்கள் ஊடகம். இது மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை தோலுரித்து காட்டும் வகையில் சிறந்த பதிவுகளை வெளியிட்டு வருகிறது. இதன் உரிமையாளர் நந்தன் என்கிற ரமேஷ் ஆவார்.

சமூக அக்கறையுள்ள மக்களின் எழுத்துக்களை தங்களது இணையதளத்தில் வெளியிட்டதன் மூலம் கீற்று இணையத்தளம் உலகெங்கிலும் உள்ள தமிழ் வாசகர்களை கவர்ந்தது. இதன் பதிவுகள் மக்களின் பிரச்சனைகளை, துயரங்களை எடுத்து சொல்வதாகவும் அதிகாரவர்க்கத்திற்கு சாட்டை அடியாகவும் அமைந்தது.

கூடங்குளம் அணு மின்நிலையம், முல்லை பெரியாறு, தமிழக மீனவர்கள் படுகொலை, ஈழத்து இன அழிப்பு என்று தமிழர்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் குறித்தும் தொடர்ந்து கீற்று பதிவுகளை வெளியிட்டு வந்தது.  இதை பொறுக்காத இந்திய உளவுத்துறை அரசு பயங்கரவாதிகள் கீற்று உரிமையாளர் ரமேஷ் அவர்களை விசாரணை என்கிற பெயரில் அழைத்து ஒரு மிரட்டலை விடுத்துள்ளனர்.

Feb 29, 2012

களவாணி அரசியல்வாதிகளும் அவதிப்படும் மக்களும்!

தினமலர் விஷப்பாம்பு : மலத்தை மலர் என்று சொல்லி விற்கும் ஒரு இழி பிறப்புத்தான் தினமலர் கூட்டம். இந்த விஷம் கக்கும் பாம்பு கூட்டம் சொல்வதெல்லாம் பொய், புரட்டுகள்தான். உளவுத்துறை என்பது மத்திய மாநில அரசுகளின் எடுபிடிகள் என்பது மக்கள் அறிந்த உண்மை.

கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்க்க  சுய உதவிக்குழுக்களுக்கு நான்கு லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்றும்,  இதனாலேயே  தினம் தினம்  3000  பெண்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதாக உளவுத்துறை எடுபிடிகள் சொன்னதாகவும், இதனால்  உதயகுமார் கும்பல் பீதியில் இருப்பதாகவும் எழுதி தன் அரிப்பை தீர்த்து கொண்டுள்ளது தினமலம்.

சகுனி கருணாநிதி:  அணுமின் நிலையமே கூடாது என நடக்கிற போராட்டத்தை, மாநில அரசு அனுமதிக்கிறதா? அவர்களை பின்னால் இருந்து தூண்டி விடுகிறதா? கூடங்குளம் அணு மின்நிலயம் அமைந்தால் மின்சார பற்றாக்குறை ஏற்படுமா? உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. உண்மை தெரிந்தவர்கள், மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர்.